Friday, 10 August 2012

‘நடிக்க அழைத்து வந்துவிட்டு .....சக்ரி டுலெட்டி வெட்டி


                                       kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news          

                                           ‘நடிக்க அழைத்து வந்துவிட்டு காட்சிகளை வெட்டிவிட்டார் இயக்குனர் சக்ரி என்று திடீர் பரபரப்பு புகார் கூறி இருக்கிறார் பார்வதி ஓமனகுட்டன். 

                                 உலக அழகி போட்டியில் பங்கேற்றவர் கேரளாவை சேர்ந்த பார்வதி ஓமனகுட்டன். இவர் அஜீத் ஜோடியாக ‘பில்லா 2 படத்தில் நடித்தார். 
                                   ஆனால் தான் நடித்த பல காட்சிகளை இயக்குனர் சக்ரி டுலெட்டி வெட்டி எறிந்துவிட்டார் என்று புகார் கூறி உள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: 
                           என் வாழ்வில் நான் செய்த தவறை நினைத்து வருந்துவதில்லை. ஆனால் பில்லா 2 படத்தில் எனது வேடத்தை பற்றி நினைக்கும்போது வருத்தம் அளிக்கிறது. 
                                     என்னுடைய காட்சிகளுக்கு வரவேற்பு கிடைத்தாலும் மனக்குறை இருக்கத்தான் செய்கிறது. நான் நடித்த காட்சிகள் அதிகமாக படமாக்கப்பட்டன. 
                                ஆனால் படத்தில் இடம்பெற்ற காட்சிகள் மிகக்குறைவு. இத்தனைக்கும் இப்படத்தில் நடிக்க என்னை அழைத்து வந்தவர் இயக்குனர் சக்ரிதான். 
                                  இப்போதைக்கு எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வேடத்திற்காக காத்திருக்கிறேன். ஆனால் எதற்காகவும் அதிக ஆசைப்படுவதில்லை. இவ்வாறு பார்வதி ஓமனகுட்டன் கூறினார்.

ரீமா சென் முதன்முறையாக படுக்கை அறை காட்சியில் நடித்திருப்பது.....

                                 
Actor interview, Actress interview, movie interview, music directors interview, singers interview


                                      இந்தி படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்தது என் கணவருக்கு பிடிக்கவில்லை என்றார் ரீமா சென். தமிழ், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ரீமா சென் முதன்முறையாக படுக்கை அறை காட்சியில் நடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


                               அனுராக் கஷ்யப் இயக்கிய ‘கேங்ஸ் ஆப் வசேபூர் படத்தில் துணிச்சலாக நடித்திருக்கும் காட்சிகள் பற்றி அவர் கூறியதாவது: கேங்ஸ் ஆப் வசேபூர்é படம் எனக்கு பெரிய ஹிட்டாக அமைந்திருக்கிறது என்கின்றனர். 


                               ஆனால் இதுதான் நான் நடிக்கும் முதல் படம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறேன். 


                               இப்படத்தில் நடித்தது சந்தோஷம். இப்படத்தின் வெற்றிக்கு படத்தில் பணியாற்றிய அனைவருமே தகுதியானவர்கள். எல்லோருக்கும் எல்லா திறமையும் இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்துவதற்கு தகுந்த இடம் கிடைப்பதில்லை. 


                                 அத்தகைய வாய்ப்பை அனுராக் ஏற்படுத்தி தருகிறார். Ôவசேபூர்Õ படத்தில் துர்கா என்ற பாத்திரத்தில் நடித்தேன். இந்த வேடத்தில் நடிக்க என்னை தவிர வேறுயாரையும் தன்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்றார் அனுராக். 


                   திருமணத்துக்கு பிறகு எனக்கு நல்ல வாய்ப்புகளாக கிடைக்கிறது. வசேபூர் படத்தில் துணிச்சலாக படுக்கை அறை காட்சியில் நடித்திருக்கிறேன்.


                 இப்படத்தை என் கணவர் பார்த்தார். அந்த காட்சி அவர் மனதை கனமாக்கி இருக்கிறது. நான் சம்பந்தப்பட்ட அந்த காட்சிகளை அவர் விரும்பவில்லை என்று என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால் இதை அவர் என்னிடம் நேரடியாக சொல்லவில்லை. இவ்வாறு ரீமா சென் கூறினார். 

Thursday, 9 August 2012

கவர்சியை அள்ளி கொட்டிய,,,,,,,ஆன்ட்ரியா

                                               
      
                                               செல்வராகவனின் குரூப்பிலிருந்து வெளிவந்த பிறகு ஆன்ட்ரியாவுக்கு தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. முன்பு அவரை அணுக தயங்கியவர்கள். 
                                                 இப்போது தாராளமாக அணுகுகிறார்கள். ஆன்ட்ரியாவும் பொறுமையாக கதைகேட்டு வருகிறார். கமலின் விஸ்வரூபத்தில் நடித்து வரும் ஆன்ட்ரியா இந்தப் படம் வெளிவந்த பிறகுதான் தமிழில் புதிய படத்தில் புதிய சம்பளத்துடன் கமிட் ஆவது என்ற முடிவில் இருக்கிறார். 


                                                இதற்கிடையில் இவர் நடித்துள்ள புதிய திருப்பங்கள் படமும் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. 
                                             இதில் பத்திரிகையாளராக நடித்துள்ள ஆன்ட்ரியா. ஒரு ரகசிய செய்தி சேகரிப்பதற்காக பாலியல் தொழிலாளியாக வேஷம் கட்டுகிறாராம். இதில் தாராளமாக கவர்ச்சியும் காட்டியிருக்கிறாராம். 

                                     
   

                                            இதற்கிடையில் அன்னாயும் ரசூலும் என்ற மலையாளப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கதைகளை தேர்வு செய்து நடிக்கும் ஆன்ட்ரியாவின் கால்ஷீட்டுக்காக மலையாளத்தில் 5 படங்கள் வரை காத்திருப்பில் இருக்கிறது. 
                                         தமிழில் சில புதுமுக இயக்குனர்கள் உள்பட பத்து பேரிடம் கதை கேட்டிருக்கிறார். விஸ்வரூபம் ரிலீசுக்குப் பிறகு எந்தப் படத்தில் நடிப்பது என்பதை டிக் செ

மம்முட்டியையும், நயன்தாராவையும் வைத்து ....பசுபதியை...மறுத்துவிட்டா,,,

                                            

                                                 பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் பிஸி நடிகையாக மாறியுள்ளார் நயன்தாரா. தெலுங்கில் இரண்டு படம்,
                                             தமிழில் அஜித்துடன் ஒரு படம் என்று நடித்து வருகிறார். இந்நிலையில் டைரக்டர் ஒருவர் மம்முட்டியையும், நயன்தாராவையும் வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார்.      
                                    மம்முட்டியுடன் ஜோடி என்றதும் நயனும் முதலில் ஓ.கே., சொல்லிவிட்டார். ஆனால் மம்முட்டி இப்படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்கவும் அதிர்ந்து போன இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் வட்டம் அவருக்கு பதிலாக பசுபதியை நடிக்க வைக்க எண்ணியிருக்கிறது. 
                                     மம்முட்டி மாற்றப்பட்டு அவருக்கு பதில் பசுபதி தான் தங்களுக்கு ஜோடி என்று நயன்தாராவிடம் கூறியபோது அவர் என்னால் பசுபதிக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம்.