Saturday, 28 July 2012
Friday, 27 July 2012
கம்பி மேல் நடந்து சாகசம் செய்த ரோஜா!
"மாஜி நடிகை என்ற அடையாளத்தோடு, அரசியல் களத்திலும் புகுந்து சில காலம் கலக்கியவர் ரோஜா.சமீபகாலமாக,
அரசியல் பணியை ஓரங்கட்டிவிட்டு, மீண்டும் கலைச் சேவையாற்ற வந்துள்ளார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரோஜா நடித்துள்ள படம், "வேட்டையாடு!
இதில் ஒரு பாடலில், பாண்டியராஜனுடன் இணைந்து, கழைக்கூத்தாடியாக நடனமாடி உள்ளார். கழைக்கூத்தாடிகளின் வாழ்க்கையை சொல்லும் அந்தப் பாடலில்,
கம்பி மேல் நடப்பது, ஒற்றை "வீல் சைக்கிள் ஓட்டுவது என்றெல்லாம் சாகசம் செய்கிறார் ரோஜா.
Tuesday, 24 July 2012
அமலா பால் அமெரிக்காவில் மகிழிச்சி தன் ........
நடிகை அமலா பால் தனது பெற்றோருடன் அமெரிக்கா சென்று 2 வாரம் ஓய்வெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள அமலாபால் ஒய்வுக்காக அமெரிக்கா சென்றார்.
அங்கு வட அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் நடத்திய நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அங்கேயே தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தார்.
பெற்றோரும் அவருடன் சென்று இருந்தனர். தற்போது அமெரிக்க ஓய்வை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார்.
அமெரிக்கா சென்று வந்தது குறித்து அமலாபால் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்கா சென்றதும், அங்குள்ள எனது உறவினர்களை சந்தித்ததும் இனிய தருணங்களாக அமைந்தது.
என் பெற்றோரை நிறைய இடங்களுக்கு அழைத்து சென்றேன். எனது தலை முடியையும் வித்தியாசமாக மாற்றியுள்ளேன், என்று கூறியுள்ளார்.
போலீசிடம் அபராதம் கட்டிய விஜய்
சமீபத்தில் சத்யம் தியேட்டரில் ஒரு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு, சென்னை - ஆயிரம் விளக்கு அண்ணாசாலை பகுதியில் தனது பி.எம்.டபிள்யூ காரில் திரும்பினார் இயக்குநர் விஜய். நான் "கிரீடம்", "மதராசப்பட்டினம்", "தெய்வத்திருமகள்" படங்களின் இயக்குநர் என விஜய் எவ்வளவோ எடுத்து சொல்லியும், எங்கெங்கோ போன் செய்தும் போலீஸார் விடுவதாக இல்லை. கடைசியாக, பைன் தொகையை கட்டிவிட்டு பி.எம்.டபிள்யூவை கிளப்பி சென்றார் விஜய். பாவம்!
வரலாறு காணாத கவர்ச்சியில்..... கரீனா கபூர்
ஐஸ்வர்யா பாதியில் விலகிய ஹீரோயின் படத்தில் அவருக்கு பதில் படு கவர்ச்சியாக நடித்து இருக்கிறார் கரீனா கபூர். மதுர் பண்டர்கர் இயக்கத்தில் இந்தியில் உருவாகும் புதியபடம் ஹீரோயின்.
நடிகையின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் தான் முதலில் நடிக்க ஒப்பந்தமானார்.
ஷூட்டிங்கும் நடந்து வந்த நிலையில், ஐஸ்வர்யா கர்ப்பமானதால் அவர் தொடர்ந்து அந்தபடத்தில் நடிக்க முடியாமல் போனது.
இதனையடுத்து அவர் இடத்திற்கு கரீனா கபூர் நடிக்க புக் ஆனார். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் வரலாறு காணாத கவர்ச்சியில் கலக்கியுள்ளதாக பேச்சு அடிபட்டு வந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளார் மது. இதில் எதிர்பார்த்ததைபோல கரீனா கபூர் படுகவர்ச்சியாக தோன்றியுள்ளார்.
படத்தின் போஸ்டரில் படுகவர்ச்சியாகவும், அவரை சுற்றிலும் ஏராளமான பத்திரிக்கைகளும், மதுக்கோப்பைகளும் கிடக்கிறது. இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது.
labels: கரீனா கபூர் , ஐஸ்வர்யா
Thursday, 19 July 2012
சிறு வயதில் இருந்தே நான் அமிதாப்பின் தீவிர ரசிகை. ஜோடியாக அவருடன் நடிக்கும் குஷ்ப்பு
இந்திப்படமொன்றில் நடிகர் அமிதாப் பச்சன் ஜோடியாக நடிகை குஷ்பு நடிக்கவுள்ளார்.
நடிகை குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்து அரசியல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
குஷ்புவுக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர். குழந்தைகளை கவனிப்பதற்காக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் மேட் டாட் என்ற இந்திப் படத்தில் குஷ்பு நடிக்க ஒப்புக் கொண்டு உள்ளார்.
இதில் அமிதாப்பச்சன் ஜோடியாக நடிக்கிறாராம். அமிதாப்புடன் நடிக்கப் போவதால் மகிழ்ச்சியில் இருக்கும் குஷ்பு, இதுபற்றி அளித்துள்ள பேட்டியில்,
சிறு வயதில் இருந்தே நான் அமிதாப்பின் தீவிர ரசிகை. அவர் படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். இப்போது அமிதாப் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளதால் சந்தோஷமாக இருக்கிறது, என்று கூறியுள்ளார்.
ஷங்கர் படத்தில் பவர் ஸ்டார் நடித்த படம் தீபாவளிக்கு வெடிக்கும்
கோடம்பாக்கத்தில் பிஸியாக பரபரப்பாக பேசப்படும் ஒரே ஸ்டார் என்றால் அது பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் தான்.
எடுப்பான பல்லும், துடிப்பான முகமும், தடிப்பான உருவமும், கருப்பு கண்ணாடியில், வெள்ளை உடையில் அவர் தலையை கோதி விடும் ஸ்டைலும், எப்படிப்பட்ட விமர்சனம் வந்தாலும் அதை அசால்ட்டாக எடுத்து கொள்ளும் மனபக்குவம் கொண்டவர், தனக்கு பெண் ரசிகர்கள் ரொம்ப இருக்காங்க, பேஸ்புக்கில் 5லட்சம் ரசிகர்கள் இருக்காங்க என்று சிரிக்காமல் சொல்பவர் இந்த மனிதர்.
தற்போது ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் இவர், முதன்முறையாக சந்தானத்துடன் கைகோர்த்து இருக்கிறார். பல விளம்பர படங்களை இயக்கிய மணிகண்டன் என்பவர் இவர்களை வைத்து "கண்ணா லட்டு திண்ண ஆசையா" என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ராமநாரயணன் இப்படத்தை தயாரிக்கிறார். பவர்ஸ்டார், சந்தானம் ஆகியோருடன் சேது என்ற மற்றொரு ஸ்கின் டாக்டரும் நடிக்கிறார். படத்தின் கதைப்படி இவர்கள் மூவரும் ஒரு பெண்ணை காதலிக்கிறார்கள்.
ஆனால் அந்தப்பெண் இவர்கள் மூவரில் யாரை காதலிக்கிறாள் என்பதை கலகலப்பாக சொல்ல போகிறாராம் டைரக்டர். தற்போது இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்கு தயாராகி வருகிறார் பவர்ஸ்டார்.
இந்நிலையில் நண்பன் படத்திற்கு பிறகு ஷங்கர், விக்ரமை வைத்து இயக்கும் "ஐ" படத்தில் ஒரு முக்கிய ரோலில் சந்தானத்துடன் சேர்ந்து பவர் ஸ்டாரும் நடிக்கிறார். என்ன நம்பமுடியவில்லையா...? நம்பாவிட்டாலும் அதுதான் நிஜம்!
இதுகுறித்து பவர்ஸ்டார் நம்மிடம் கூறியதாவது, ஷங்கர் படத்தில் நடிப்பது உண்மை. எப்படி இப்படியொரு வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தது என்று கேட்டால் எல்லாம் கடவுளின் அருள் என்றார். சரி படத்தில் உங்கள் ரோல் என்ன என்று கேட்டபோது, சாரி! இப்போதைக்கு என்னால் எதுவும் சொல்ல முடியாது. ஏனென்றால் இது ஷங்கர் படம்,
இப்போது 3 நாள் ஷூட்டிங்கை முடித்துவிட்டேன். இன்னும் 2நாள் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது என்றார் ரொம்ப அடக்கமாய். மேலும் தான் நடித்துள்ள "ஆனந்த தொல்லை" படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும்,
தீபாவளி அன்று தான் என் படம் ரிலீஸ் ஆக வேண்டும். அப்போது தான் ரசிகர்களிடம் அது ரீச்சாகும். ரசிகர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்றார் சிரிக்காமல்...!
தமிழ் படத்திக்கு வரும் ஜான் ஸினா?
ஆக்ஷன் விஷயங்களில் ஹாலிவுட் படத்தில் பணியாற்றியவர்கள் இங்கும் பணியாற்றியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக இந்தி நடிகர், நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினர்.
அனுபம் கெர், அனில்கபூர், இர்பான்கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரீடா பின்டோ மல்லிகா ஷெராவத், பிபாஷா பாஷு உட்பட பலர் ஹாலிவுட் படங்களில் நடித்துவருகின்றனர்.
இதையடுத்து இப்போது ஹாலிவுட் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்ப் படங்களில் ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக்குவது பேஷனாகி உள்ளது.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’ படத்தில் ஹாலிவுட் நடிகர் ரோலண்ட் கிக்கிங்கர் வில்லனாக நடித்திருந்தார். சர்வதேச அரசியல் பற்றிய படமான இதில் அவரது கேரக்டர் பாராட்டப்பட்டது. இதையடுத்து விஜய் இயக்கிய ‘மதாரசபட்டினம்’ படத்தில் வில்லனாக அலெக்ஸ் ஓ நெல் நடித்திருந்தார்.
காதல் கதையான இதில் அலெக்ஸின் நடிப்பு பொருத்தமாக இருந்தது. இவரே சந்தோஷ் சிவனின் ‘உருமி’ படத்திலும் நடித்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘7ஆம் அறிவு’ படத்தில் ஜானி டிரை நுயன் வில்லனாக நடித்திருந்தார். மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டரான ஜானியின் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. ‘விளையாட்டு’ என்ற படத்தில் ஆன்ட்ரூ என்பவர் நடித்திருந்தார்.
இந்த படங்கள் வெளியாகிவிட்ட நிலையில் அடுத்து ரிலீஸ் ஆக உள்ள படங்களிலும் ஹாலிவுட்டில் இருந்து வில்லன்கள் இறக்குமதி ஆகின்றனர். ஜெயம்ரவி, த்ரிஷா நடிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் படம், ‘பூலோகம்’. இதில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர்களான ஜான் ஸினா மற்றும் ஸ்டீவ் ஆஸ்டினிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஜான்ஸினா ‘12 ரவுண்ட்’, ‘மரைன்’ உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவர். இதே போல ஸ்டீவ் ஆஸ்டின் ‘நாக்கவுட்’, ‘கன்டம்டு’ உட்பட பல படங்களில் நடித்தவர். இதையடுத்து அமீர் இயக்கும் ‘ஆதிபகவன்’ படத்தில் தாய்லாந்து ஸ்டண்ட் நடிகர்கள் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளனர்.
இதே போல கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் ‘விஸ்வரூபம்‘ படத்திலும் ஹாலிவுட் நடிகர்கள் வில்லன்களாக நடித்துள்ளனர். அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம் 2’ படத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வில்லன் நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
Wednesday, 18 July 2012
சுவாசிகா வலியை தாங்கிக்கொண்டு நடித்த...ரணம் படத்தில்...40 முறை
ரணம் படத்தில் சுவாசிகா நடித்த காட்சி 40 முறை படமாக்கப்பட்டது. பிரபு சாலமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எஸ்.விஜயசேகரன் இயக்கும் படம் ரணம்.
வித்தியாசமான கதை அமைப்புடன் உருவாகி இருக்கும் இதில் புதுமுகம் வீரா ஹீரோ. ஹீரோயின் சுவாசிகா. முக்கிய வேடத்தில் சரத், கார்த்தி கேயன் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தில் வில்லன் ராஜேந்திரன், சுவாசிகா நடித்த காட்சி படமாக்கப்பட்டது. சுவாசிகாவை சுவற்றில் இடித்து மோதும் காட்சி படத்தில் முக்கிய காட்சியாக இடம்பெறுகிறது.
இதற்காக சுவாசிகாவின் தலையை சுவற்றில் மோதும் காட்சி 40 முறை வெவ்வேறு கோணங்களில் படமாக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட வலியை சுவாசிகா தாங்கிக்கொண்டு நடித்தார். எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, சங்கிலி முருகன் மற்றும் மலேசியா நடிகர்கள் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு பாலகிருஷ்ணன். இசை மரியா மனோகர். இவ்வாறு விஜயசேகரன் கூறினார்.
துப்பாக்கி படம் ரிலீஸ் ஆக இன்னும் சில..... விஜய்.. இவருடன் ஆன்ட்ரியா சேர்ந்து
இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது 'துப்பாக்கி' படம்.
ஆக்சன் படமான இதில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் துப்பாக்கி படத்தில் ஒரு பாட்டு பாடியுள்ள விஜய், இன்னொரு பாடலை பாடியுள்ளாராம். இவருடன் ஆன்ட்ரியா சேர்ந்து பாடியுள்ளாராம்.
மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல், செம ஹிட்டாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்ள்ளது.
இது... குத்துப் பாடல்கள் இல்லாத ஏக்கத்தை தீர்த்துவிடும்...மிஸ்கின்
இயக்குனர் மிஸ்கின், தான் இயக்கும் படங்களில் இடம் பெறும் குத்துப்பாட்டில் மஞ்சள் சேலையில் நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவ்வாறு இடம் பெற்ற சித்திரம் பேசுதடி படத்தில் வாலமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...., அஞ்சாதே படத்தில் கத்தால கண்ணால.. போன்ற பாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அந்த வகையில் அவர் தற்போது இயக்கி வரும் முகமூடி படத்திலும், அதுமாதிரியான பாடல் இடம்பெறுமா? என்ற கேள்விக்கு மிஸ்கின் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், முகமூடி ஒரு சூப்பர் ஹீரோ படமாகும். அதில் குத்துப் பாடலில் மஞ்சள் சேலையில் ஆடுவது கதைக்கு பொருந்தாது. இருந்தாலும் படத்தில் டாஸ்மாக் கடையில் வைத்து பிரம்மாண்டமான முறையில் ஒரு பாடலை எடுத்து இருக்கிறோம்.
இந்த பாடல், என்னுடைய பழைய படங்களில் உள்ள குத்துப் பாடல்கள் இல்லாத ஏக்கத்தை தீர்த்துவிடும், என்றார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 20ம் தேதி நடைபெற உள்ளது.
labels:முகமூடி, மஞ்சள், சேலையில்லா, குத்துப்பாடல், மிஸ்கின், Not, yellow, sarry, dance, Myskin,
Tuesday, 17 July 2012
மீண்டும் நடிக்க வந்த ஜோதிர்மயி சின்ன திரையில்
கணவரை விவாகரத்து செய்துவிட்ட நடிகை ஜோதிர்மயி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
தமிழில் தலைநகரம், பெரியார், நான் அவனில்லை என சில படங்களில் நடித்தார் ஜோதிர்மயி. அவர் தலைநகரம் படத்தில் நடிக்கும் முன்பே, 2004-ல் ஹரிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கோலிவுட்டில் ஆது யாருக்கும் தெரியாமல் இருந்தது.
ஆனால் படம் வெளியான பிறகு நடந்த பிரஸ்மீட்டில் அவராகவே சொல்லிவிட, அப்போதே அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.
ஹரிகுமார் - ஜோதிர்மயி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்கள்.
கடந்த வருடம் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது. விவாரத்துக்குப் பின் சினிமாவை விட்டு சில மாதங்கள் ஒதுங்கி இருந்த ஜோதிர்மயி, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் அக்காள், அண்ணி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். கதை கேட்டு வருகிறார். இதற்கிடையில் மலையாள டி.வி. சேனல் ஒன்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டுள்ளார்.
குனிந்ததை பார்த்த போட்டோகாரன் கன்னம்..... பளார்
அரோகன்டான' நடிகை என்றுதான் அம்மணிக்கு பெயர். குணத்தில் மட்டுமல்ல, ஒன்றாக இருக்கும் குடும்பத்தைப் பிரிப்பதிலும் நடிகையின் மூர்க்கம் கோடம்பாக்கம் அறிந்தததுதான்.
மிக சமீபத்தில் அண்மையில் ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார் இந்த நடிகை. ஏடாகூடமான உடையில், எக்கச்சக்க கவர்ச்சி ததும்ப வந்திருந்தாராம்.
அவர் ஒவ்வொரு முறை குனிந்து நிமிரும்போதும் புகைப்படக்காரர்கள் வேறு பக்கம் பார்க்கும்படி இருந்ததாம் நிலைமை. அவர் எதையும் கண்டு கொள்ளாமல், மீண்டும் மீண்டும் குனிந்து நிமிர, எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு க்ளிக் அடித்திருக்கிறார் போட்டோகிராபர்.
அவ்வளவுதான். கோபத்தின் உச்சிக்கே போய்விட்ட நடிகை, போட்டோகிராபரை அருகில் அழைத்து பளார் விட்டாராம். கடுமையாக அவரை எச்சரித்ததோடு, அந்த போட்டோக்களையும் அழித்துவிட்டாராம்.
கன்னத்தைத் தடவிக் கொண்டே, கேமராவைக் கொடுக்கும்போது நடிகை குனிந்து நிமிர்ந்ததை கடைசியாகப் பார்த்தபடி வெளியேறினாராம் போட்டோகிராபர்!
ரசிகர்கள் ரசித்த ஸூபர் மேலாடை விலக்கிய கண்குள்ளா காட்சி
பிரான்ஸில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது பிரபல பாப் பாடகி மடோனா தன் உள்ளாடைகளை விலக்கி, ரசிகர்களை ஏகத்துக்கும் உசுப்பேற்றியது மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
பிரபல பாப் பாடகி மடோனோ தன் மகளுடன் உலக இசைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
கடந்தமாதம் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் இஸ்தான்புல் நகரில் இசைக்கச்சேரி நடத்தியபோது, மேடையில் மிகக் கவர்ச்சியாக தோன்றினார் (அம்மணிக்கு வயசு 53!). 55000 ரசிகர்கள் முன்னிலையில் அவர் தனது வலப்பக்க பிராவை லேசாக இறக்கி முன்னழகைக் காட்டி அதிர வைத்தார்.
இது பெரும் சர்ச்சையையும் விமர்சனங்களையும் கிளப்பியது.
இந்த சர்ச்சை ஓயும் முன்பே, மீண்டும் ஒரு படி கீழிறங்கிவிட்டார் மடோனா.
கடந்த சனிக்கிழமை அன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அவர் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு 80000 ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
மேடையில் பேய் வேகத்தில் ஆட்டம் போட்ட மடோனா, ரொம்ப கூலாக தனது இடது பக்க பிராவை விலக்கி முன்னழகை முழுசாகக் காட்ட, ரசிகர்கள் திக்குமுக்காடினர். அடுத்து அவர்களை இன்னும் அதிர வைக்கும் விதத்தில் தனது பேன்டின் பக்கவாட்டு ஜிப்பை சரக்கென்று இழுக்க, அது கீழே இறங்கி அவரது மெல்லிய பேன்டீஸைக் காட்டியது. சில நொடிகள் கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் தரிசனம் தந்தார்.
அப்படியே பின்பக்கம் திரும்பி கொஞ்ச நேரம் நின்றார். முதுகில் நோ பியர் என்று வேறு எழுதப்பட்டிருந்தது.
மடோனா இப்படி நடந்து கொள்வது புதிதல்ல. அவர் ஏற்கெனவே 1995-ல் மேடையில் ஒரு கச்சேரியின்போது சட்டென்று நிர்வாணமாகி அதிர்ச்சி கொடுத்தார்.
மடோனாவின் இந்த செயலை பத்திரிகை மற்றும் பார்வையாளர்களில் பலர் விமர்சித்துள்ளனர்.
அதேநேரம் சில ரசிகர்கள் 'சூப்பர்ப் ஸீன்' என்று கொண்டாடவும் தவறவில்லை!
சென்னையைச் சேர்ந்த அழகு... தீபிகா......ஒரு போதும் நடிகையாக மாட்டேன்.
சென்னையைச் சேர்ந்த அழகுப் பெண்தான் தீபிகா. ஸ்குவாஷ் விளையாட்டில் ஜொலிக்கும் நட்சத்திரம். பூர்வீகம் கேரளா. இதனாலோ என்னவோ தீபிகாவைத் தேடி சினிமாக்காரர்கள் லைன் கட்டி நிற்க ஆரம்பித்துள்ளனராம்.
எப்படியாவது தீபிகாவை சினிமாவுக்குள் இழுத்து அவரையும் நடிக்க வைத்து விட வேண்டும் என்று ஏராளமான பேர் எப்படியெல்லாமோ முயல்கின்றனராம்.
இப்படித்தான் சானியா மிர்ஸா ஹாட்டாக விளையாடிக் கொண்டிருந்தபோது அவரையும் சினிமாவுக்குள் இழுத்து விட சகலரும் முயன்றனர். நம்ம சிம்பு கூட முயன்று பார்த்தார். ஆனால் முடியவில்லை. அனைவருக்கும் பெப்பே காட்டி விட்டார் சானியா.
இப்போது தீபிகாவை இழுக்க ஒரு கூட்டமே அலை மோதுகிறதாம். ஆனால் அதெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கூறி விட்டார் தீபிகா. உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நான் சினிமாவுக்கு ஒருபோதும் வர மாட்டேன், சத்தியமாக மாட்டேன் என்று தெளிவாக பேசுகிறார் தீபிகா.
சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனைகள் வரிசையில் 14வது இடத்தில் இருக்கும் தீபிகா, இதுகுறித்துக் கூறுகையில், நான் விளையாடும்போது சத்தம் போட்டுக் கொண்டபடிதான் விளையாடுவேன்.
இது அனைவரையும் கவர்ந்து விட்டது. என் பால் மற்றவர்களுக்கு ஈர்ப்பு வர இந்த சத்தம்தான் காரணம். விளையாட்டின் மூலம்தான் நான் பேசப்படுகிறேன் என்று நினைக்கிறேன்.
என்னைத் தேடி சினிமா வாய்ப்புகள் நிறைய வந்தன, கோலிவுட்டிலிருந்துதான். ஆனால் நான் தான் முடியாது என்று கூறி விட்டேன். என்னால் நடிகையாக முடியாது. வாழ்க்கை நடத்த வேண்டும் என்று நிலையிலும் கூட நடிகையாக மாட்டேன் என்கிறார் தெளிவாக.
சரி பாய் பிரண்ட் உள்ளனரா என்று கேட்டால், எங்கங்க, எனக்கு விளையாடவே நேரம் போதவில்லை. பெரும்பாலான நேரத்தில் நான் போட்டிகளுக்கான டூரிலேயே இருக்கிறேன். பிறகெப்படி அதற்கெல்லாம் நேரம் இருக்க முடியும்.
ஒரு வேளை இப்படிப்பட்ட பிசியான வாழ்க்கை இல்லாமல் போயிருந்தால் நிச்சயம் பாய் பிரண்ட் இருந்திருக்கலாம் என்கிறார் வெளிப்படையாக.
Subscribe to:
Posts (Atom)

